ஜெ. ராம்கி என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் ஜெ. ராமகிருஷ்ணன் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பண்பாட்டு ஆர்வலர். சென்னையில் பன்னாட்டு தொலைத் தொடர்புத்துறை நிறுவனத்தில் மென்பொருள் நிபுணராக பணிபுரிகிறார். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுகைகள் குறித்து இவர் எழுதியுள்ள புத்தகங்கள் பெரிய அளவில் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. நரசிம்மராவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஐரம் ஷர்மிளா குறித்த புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அச்சு ஊடகங்களிலும் இணையத்திலும் அரசியல், வரலாறு குறித்து தொடர்ந்து எழுதிவருகிறார்.